சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் அதிக ஆர்வம் : கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி

கோவை : சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.


கோவை : சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் மாற்றங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 



இதன் ஒரு பகுதியாக, கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி அரசு, தனியார் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இந்நாளை அனுசரித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. பந்தய சாலை வருமான வரித்துறை அலுவலகம் அருகே அம்பாள் ஆட்டோஸ் குழுமம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அடங்கிய வாகனம் மற்றும் பேரணியை துவக்கி வைத்தார்.



இப்பேரணியில் பங்கேற்றவர்கள் “மரம் நடுவோம் நிழல் தருவோம்”, பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதே மண் வளத்தை கெடுக்காதே” போன்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து, அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறுகையில், “மக்கள் பெருக்கம், தட்பவெட்ப நிலை மாற்றம், நவீன வாழ்கை முறை ஆகிய காரணங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சி சார்பில் தனியாருடன் இணைந்து ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது, என அப்போது அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், அம்பாள் ஆட்டோ குழுமங்களின் தலைவர் அசோக் முத்துசாமி, மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...