பாடப்புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் பாரதியாரின் காவி முண்டாசு விவகாரம் : செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் சென்ற அமைச்சரால் அதிருப்தி

கோவை : 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் பாரதியாரின் முண்டாசு காவி நிறத்தில் இருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது.


கோவை : 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் பாரதியாரின் முண்டாசு காவி நிறத்தில் இருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. 

தமிழக அரசின் புதிய பாடத்தின்படி வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தமிழ் பாடபுத்தக அட்டையில் இடம் பெற்றுள்ள பாரதியார் வெள்ளை முண்டாசுக்கு பதில் காவி நிறத்திலான முண்டாசு கட்டியிருப்பது போன்று அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கோபிச் செட்டிபாளையம் செல்வதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். 

அப்போது, அவரிடம் 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் பாரதியாரின் முண்டாசு காவி நிறத்தில் இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப் பத்திரிக்கையாளர்கள் முயன்றனர். ஆனால், அமைச்சர் செங்கோட்டையன் அங்கிருந்து வேறு வழியாக திரும்பிச் சென்று, போலீசார் மற்றும் கட்சியினர் புடைசூழ தனது காரை வரவழைத்து வேகவேகமாக ஏற முற்பட்டார். அப்போது, மும்மொழி கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய போது, "வம்பில் மாட்டி விட வேண்டாம். "எல்லாம் அமைதியாக போயிக் கொண்டிருக்கிறது," எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

பாரதியாரின் முண்டாசு, மும்மொழிக் கொள்கை ஆகியவை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து பதில் அளிக்காமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சென்றது கோவை விமான நிலையத்தில் கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடத்தில் ஆச்சரியத்தையும், ஏமாற்றத்தையும் அளித்தது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...