'என்னமோ பிரச்சனை ஆயிருச்சு அம்மாவுக்கு' : சூலூரில் மர்மமான முறையில் உயிரிழந்த செவிலியரின் 3 வயது மகளின் மனதை உருக்கும் பேச்சு

கோவை : சூலூரில் செவிலியர் பாண்டி மீனா மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில், அவரது 3 வயது குழந்தை பேசிய வீடியோ அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை : சூலூரில் செவிலியர் பாண்டி மீனா மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில், அவரது 3 வயது குழந்தை பேசிய வீடியோ அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் கலங்கல் சாலையில் உள்ள விவேகானந்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் முரளி சங்கர் (27) மற்றும் பாண்டி மீனா (24). இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. பாண்டிமீனா பல்லடம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்த சூழலில், பாண்டி மீனாவுக்கும், அவரது கணவர் மற்றும் கணவரின் பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாண்டி மீனா மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த தனது மகளின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், ஆகவே உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பாண்டி மீனாவின் பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர். 

மேலும், பாண்டி மீனாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து, செவிலியரின் மரணம் தொடர்பாக போலீசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், கொலை வழக்காக மாற்ற வேண்டும் என பாண்டி மீனாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.



இந்த நிலையில், செவிலியர் பாண்டி மீனாவின் 3 வயது மகள் தனது தாயின் மரணம் குறித்து பேசும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், தன்னை அஸ்மிதா என அறிமுகம் செய்து கொண்ட கள்ளமில்லா அந்தக் குழந்தை, என்னமோ பிரச்சனை ஆயிருச்சு அம்மாவுக்கு, பிரச்சனை 

ஆயிருச்சு. கயிறு போட்டுட்டாங்க எனக் கூறும் போது அப்பா என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும், தாயின் மரணம் குறித்து பார்த்தீங்களா என்று சிலர் கேட்டதற்கு, பார்த்தேன் என்று குழந்தை அஸ்மிதா தெரிவித்தது. தொடர்ந்து, அந்தக் குழந்தை கூறும்போது, "என் அம்மா என்னை தங்கமே, எங்கப் போற என்று சொல்லியதாக தெரிவித்தது காண்போர் உள்ளங்களை உருக்கியுள்ளது. 

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், குழந்தை பேசிய இந்த வீடியோ காட்சிகளைக் கொண்டு போலீசார் செவிலியரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்துவார்களா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...