கோவை : உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.
கோவை : உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுடன் தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இட ஓதுக்கீடு பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 37 பேரூராட்சி, 227 ஊராட்சி, 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இட ஓதுக்கீடு பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 37 பேரூராட்சி, 227 ஊராட்சி, 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.