திருப்பூர் : நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கழிவு பஞ்சு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தக் கோரியும் காடா துணி ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கோரியும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் : நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கழிவு பஞ்சு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தக் கோரியும் காடா துணி ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கோரியும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கழிவு பஞ்சு ஏற்றுமதி காரணமாக நூல் விலை அதிகரித்துள்ளதாகவும், காடா துணியின் விலை குறைந்தும் வருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாகவும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நூல் விலையை சீராக வைத்திருக்க வலியுறுத்தியும், மூலப்பொருளான கழிவு பஞ்சு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி உற்பத்தி பொருட்களான காடா துணியை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 25 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், 10 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் என்றும், நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரம் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

கழிவு பஞ்சு ஏற்றுமதி காரணமாக நூல் விலை அதிகரித்துள்ளதாகவும், காடா துணியின் விலை குறைந்தும் வருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாகவும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நூல் விலையை சீராக வைத்திருக்க வலியுறுத்தியும், மூலப்பொருளான கழிவு பஞ்சு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி உற்பத்தி பொருட்களான காடா துணியை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 25 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், 10 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் என்றும், நேரடியாக ஒரு லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரம் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.