நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஓடும் மினி பேருந்து, ஜீப், வாடகை கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளனவா..? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஓடும் மினி பேருந்து, ஜீப், வாடகை கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளனவா..? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், தின்பண்ட காகிதங்கள் உள்ளிட்ட வீணானப் பொருட்களை பயணத்தின் போது, சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால், மாவட்டத்தில் ஆங்காங்கே குப்பைகள் சிதறிக் கிடப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, நீலகிரியில் ஓடும் மினி பேருந்து, ஜீப், வாடகை கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் ஓடும் மினி பேருந்து, ஜீப், வாடகை கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளனவா..? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக ஆர்.டி.ஓ., கதிரவன் கூறுகையில், "நீலகிரியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 5,078 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இம்மாவட்டத்தில் வாகன விபத்து குறைந்துள்ளது. அதே சமயத்தில், குடிபோதை, சீட்பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்குவது என பல்வேறு விதிமீறலுடன் வாகனங்களை இயக்கியதற்காக வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற விதிமீறலை சில வாகன ஓட்டிகள் தொடர்ந்து செய்து வந்ததால், அவர்களின் லைசென்ஸ் 5 ஆண்டுகள் வரை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், தின்பண்ட காகிதங்கள் உள்ளிட்ட வீணானப் பொருட்களை பயணத்தின் போது, சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால், மாவட்டத்தில் ஆங்காங்கே குப்பைகள் சிதறிக் கிடப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, நீலகிரியில் ஓடும் மினி பேருந்து, ஜீப், வாடகை கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் ஓடும் மினி பேருந்து, ஜீப், வாடகை கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளனவா..? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக ஆர்.டி.ஓ., கதிரவன் கூறுகையில், "நீலகிரியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 5,078 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் இம்மாவட்டத்தில் வாகன விபத்து குறைந்துள்ளது. அதே சமயத்தில், குடிபோதை, சீட்பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்குவது என பல்வேறு விதிமீறலுடன் வாகனங்களை இயக்கியதற்காக வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற விதிமீறலை சில வாகன ஓட்டிகள் தொடர்ந்து செய்து வந்ததால், அவர்களின் லைசென்ஸ் 5 ஆண்டுகள் வரை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.