கோவையில் ரூ. 19 லட்சம் நில மோசடியில் ஈடுபட்ட வயதான தம்பதியினர் கைது

கோவை : கோவையில் நில விற்பனையில் ரூ. 19 லட்சம் மோசடி செய்ததாக வயதான தம்பதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை : கோவையில் நில விற்பனையில் ரூ. 19 லட்சம் மோசடி செய்ததாக வயதான தம்பதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

காந்திபுரம் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜி. சீனிவாசன். இவரிடம் சரவணம்பட்டி, விசுவாசபுரத்தில் வசித்து வரும் குடும்ப நண்பர்களான ஆர். மணி (68), வனஜா (51) ஆகிய தம்பதிகள், மகளின் திருமணத்திற்காக இடத்தின் பத்திரத்தை வைத்து ரூ. 19 லட்சம் பெற்றுள்ளனர். மகளின் திருமணம் முடிவடைந்ததையடுத்து, சீனிவாசன் மணியின் வீட்டிற்கு சென்று பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்த மணி மற்றும் வனஜா தம்பதியினர், பத்திரம் தொலைந்து விட்டதாகக் கூறி, சர்பதிவாளர் அலுவலகத்தில் நகல் பத்திரத்தை முறையாகப் பெற்றுள்ளனர். 

பின்னர், அந்த இடத்தை தனது மற்றொரு மகளான சுகன்யா என்பவருக்கு தான செட்டில்மென்ட் செய்யப்பட்டு, சென்னையைச் சேர்ந்தவருக்கு ரூ. 50 லட்சத்திற்கு விற்கப்பட்டு விட்டது. இதில், தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்த சீனிவாசன், கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், மணி மற்றும் வனஜா தம்பதியினரை கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...