திருப்பூர் : திருப்பூரில் சீட்டு நடத்தி சுமார் ரூ. 2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி பணத்தை பறிகொடுத்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் சீட்டு நடத்தி சுமார் ரூ. 2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி பணத்தை பறிகொடுத்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் - பல்லடம் ரோடு, கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் வஞ்சீஸ்வரி, அவரது சகோதரியான பூங்கொடி, சாமிநாதன் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுமார் 200 நபர்களை வைத்து 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்த நிலையில், பணம் செலுத்தியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல், கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் இழுத்தடித்து வந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட வஞ்சீஸ்வரிக்கு சொந்தமான கணபதிபாளையத்தில் உள்ள வீட்டை ரூ. 85 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டு, பூங்கொடி, வஞ்சீஸ்வரி, சாமிநாதன் ஆகிய மூவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் வீரபாண்டி காவல்நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன் மனு அளித்திருந்தனர். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பணத்தை பறிகொடுத்த மக்கள் அலட்சியமாக செயல்படும் போலீசாரை கண்டித்தும், மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனிடையே, மோசடியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான அங்கமுத்து என்பவர் கடையில் இருந்ததைக் கண்ட பொதுமக்கள், அவரை முற்றுகையிட்டு பணத்தை திருப்பி தரக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கமுத்துவை விசாரணைக்காக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

திருப்பூர் - பல்லடம் ரோடு, கிருஷ்ணா நகர் பகுதியில் வசிக்கும் வஞ்சீஸ்வரி, அவரது சகோதரியான பூங்கொடி, சாமிநாதன் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுமார் 200 நபர்களை வைத்து 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்த நிலையில், பணம் செலுத்தியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல், கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் இழுத்தடித்து வந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட வஞ்சீஸ்வரிக்கு சொந்தமான கணபதிபாளையத்தில் உள்ள வீட்டை ரூ. 85 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டு, பூங்கொடி, வஞ்சீஸ்வரி, சாமிநாதன் ஆகிய மூவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் வீரபாண்டி காவல்நிலையத்தில் ஒரு வாரத்திற்கு முன் மனு அளித்திருந்தனர். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பணத்தை பறிகொடுத்த மக்கள் அலட்சியமாக செயல்படும் போலீசாரை கண்டித்தும், மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனிடையே, மோசடியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான அங்கமுத்து என்பவர் கடையில் இருந்ததைக் கண்ட பொதுமக்கள், அவரை முற்றுகையிட்டு பணத்தை திருப்பி தரக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கமுத்துவை விசாரணைக்காக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.