புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் : திருப்பூரில் பெண்கள் ஒன்றிணைந்து மனு

திருப்பூர் : திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 



அனுப்பர்பாளையம், கலைவாணி தியேட்டர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் கடந்த வாரம் புதிதாக டாஸ்மாக் கடையானது திறக்கப்பட்டது. இங்கு மது அருந்தும் குடிமகன்கள் குடிபோதையில் நிர்வாணமாக சாலையில் படுத்துக் கிடப்பதோடு, அவ்வழியே பள்ளி கல்லூரிகளுக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோல் குடிமகன்கள் போதையில் அவ்வழியே செல்பவர்களை ஆபாசமாக பேசி வருவதாகக் கூறப்படுகிறது. 



இது குறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும் பொதுமக்கள், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அப்போது தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...