கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலின் அவசியத்தையும், வனங்களின் அவசியத்தையும் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலின் அவசியத்தையும், வனங்களின் அவசியத்தையும் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி சார்பாக நடைபெற்ற இந்த பேரணியானது, கல்லாரில் இருந்து தொடங்கி ஓடந்துரை வரை நடைபெற்றது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள வனங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து துணிப்பையினை பயன்படுத்தவும் இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தும் கோசங்களை எழுப்பியவாறு உதகை - மேட்டுப்பாளையம் முக்கிய சாலை வழியே பள்ளி மாணவ, மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணி நடத்தினர்.

மேலும், மேட்டுப்பாளையம் - உதகை வழிச்சாலைகளைப் பயன்படுத்தி அவ்வழியே பயணித்த வாகன ஓட்டிகளை நிறுத்திய மாணவர்கள், அவர்களுக்கு இயற்கையின் அவசியத்தையும் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க செய்ய வேண்டியது குறித்து கூறி இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி சார்பாக நடைபெற்ற இந்த பேரணியானது, கல்லாரில் இருந்து தொடங்கி ஓடந்துரை வரை நடைபெற்றது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள வனங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து துணிப்பையினை பயன்படுத்தவும் இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தும் கோசங்களை எழுப்பியவாறு உதகை - மேட்டுப்பாளையம் முக்கிய சாலை வழியே பள்ளி மாணவ, மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணி நடத்தினர்.

மேலும், மேட்டுப்பாளையம் - உதகை வழிச்சாலைகளைப் பயன்படுத்தி அவ்வழியே பயணித்த வாகன ஓட்டிகளை நிறுத்திய மாணவர்கள், அவர்களுக்கு இயற்கையின் அவசியத்தையும் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க செய்ய வேண்டியது குறித்து கூறி இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.