கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி அவதூறு பரப்புவதாக அ.தி.மு.க. பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த தேசிய லீக் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி அவதூறு பரப்புவதாக அ.தி.மு.க. பிரமுகர் கொடுத்த புகாரின் பேரில், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த தேசிய லீக் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் முஜி. இவர் அ.தி.மு.க. 86-வது வார்டு செயலாளராக உள்ளார். இவர் மீது அதேபகுதியில் உள்ள தேசிய லீக் கட்சியை சேர்ந்த பிலால் என்பவர் சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவத்தை தொடர்புபடுத்தி பதிவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அ.தி.மு.க. புறநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு துணை செயலாளர் ரியோஸ்கான் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் பிலால் மீது அவதூறு புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் பிலாலை கைது செய்தனர்