கோவை மாநகராட்சிக்குட்பட்ட 8 நடுநிலைப் பள்ளிகளில் முதல்முறையாக மழலையர் வகுப்புகள் தொடக்கம்

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 8 நடுநிலைப்பள்ளிகளில் முதல்முறையாக மழலையர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது.


கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 8 நடுநிலைப்பள்ளிகளில் முதல்முறையாக மழலையர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்கள் கண்டறியப்பட்டு, அந்த மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட சங்கனூர், டாடாபாத், கோட்டை, வெட்ரபன் பேட்டை, ஆர்.எஸ்.புரம், பாப்பநாயக்கன் பாளையம், கணபதி ராமகிருஷ்ணாபுரம் மற்றும் ஒப்பணக்கார வீதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

மொத்தம் இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 140 மாணவர்களும், யூ.கே.ஜி. வகுப்புகளில் 170 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கு நண்பகல் 12 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பின்னர், அவர்கள் அங்கன்வாடிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மொத்தம் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 13 நடுநிலைப் பள்ளிகளில் 8 பள்ளிகளுக்கு மட்டுமே முதற்கட்டமாக அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...