திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்த மாற்றுத்திறனாளி இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்த மாற்றுத்திறனாளி இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமின் போது, ஊரக பெண் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு அருகில் நீண்ட நேரமாக செல்போனில் பேசியபடியும், செல்பி எடுப்பது போலவும் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவர் தங்களை புகைப்படம் எடுப்பதை உணர்ந்த பெண் காவலர்கள், அந்த இளைஞரிடம் விசாரித்த போது, அவர் தனது செல்போனில் எடுத்திருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக அழிக்கத் துவங்கினார். இதனைக் கண்ட மற்ற போலீசார் அந்த இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்து சோதனை செய்தனர். அதில், பெண் காவலர்களை அந்த இளைஞர் ஆபாசமாக புகைப்படம் எடுத்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (34) என்பதும், திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமின் போது, ஊரக பெண் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு அருகில் நீண்ட நேரமாக செல்போனில் பேசியபடியும், செல்பி எடுப்பது போலவும் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவர் தங்களை புகைப்படம் எடுப்பதை உணர்ந்த பெண் காவலர்கள், அந்த இளைஞரிடம் விசாரித்த போது, அவர் தனது செல்போனில் எடுத்திருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக அழிக்கத் துவங்கினார். இதனைக் கண்ட மற்ற போலீசார் அந்த இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்து சோதனை செய்தனர். அதில், பெண் காவலர்களை அந்த இளைஞர் ஆபாசமாக புகைப்படம் எடுத்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, நடத்திய விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (34) என்பதும், திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.