ரம்ஜானை முன்னிட்டு குன்னூர் - ரன்னிமேடு இடையே குறுகிய தூர சிறப்பு மலை ரயில் இன்று முதல் இயக்கம்

கோவை : ரம்ஜானை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் குன்னூர் முதல் ரன்னிமேடு வரை 5 கிலோ மீட்டர் குறுகிய தூர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது.


கோவை : ரம்ஜானை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் குன்னூர் முதல் ரன்னிமேடு வரை 5 கிலோ மீட்டர் குறுகிய தூர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது.

ரயில்வே நிர்வாகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 7-ம் தேதி வரை குன்னூரில் இருந்து 5 நாட்கள் ரன்னிமேடு வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் மூன்று பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகிறது. இதில், முதல் வகுப்பிற்கு 56 இருக்கைகள், இரண்டாம் வகுப்பிற்கு 30 இருக்கைகளும் என மொத்தம் 86 இருக்கைகள் கொண்ட இந்த ரயில், குன்னூரில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு, சுமார் 5 கிலோ மீட்டர் வரை பயணித்து ரன்னிமேடு பகுதிக்கு சுமார் 12 மணி அளவில் வந்து அடையும். மீண்டும் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் இருந்து 1 மணியளவில் புறப்பட்டு, சுமார் 1.30 மணியளவில் குன்னூர் வந்தடையும். 



இதனிடையே, மலை குன்றுகள், நீர் அருவிகள், மலை குகைகள்,' பள்ளத்தாக்குகள், ரன்னிமேடு அருகில் உள்ள இயற்கை எழில் மிகுந்த காட்டேரி பூங்கா உள்ளிட்ட பகுதிகளை ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் வகையில், இந்தக் கால இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இரயிலில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேநீர் மற்றும் ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்ய முதல் வகுப்பிற்கு 450 ரூபாயும், இரண்டாம் வகுப்பிற்கு 320 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும், முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவு பொருட்கள், தேநீர் மற்றும் பூங்காவிற்கான நுழைவு கட்டணம் இதில் அடங்கும். ஏற்கனவே, சீசனுக்காக இயக்கப்பட்ட இந்த மலை ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், தற்போது மீண்டும் ரம்ஜானுக்காக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...