கோவை : போகியத்திற்கு கொடுத்த பணத்தை தராமல் ஏமாற்றி வரும் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : போகியத்திற்கு கொடுத்த பணத்தை தராமல் ஏமாற்றி வரும் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கணபதி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் விஜயகுமார். இவரது குடியிருப்பில் உள்ள அடுக்குமாடி வீடுகளில் நான்கு குடும்பங்கள் சில வருடங்களுக்கு முன்பு போகியத்திற்கு குடி வந்தது. போகிய தொகையாக மூன்றரை லட்சம் கொடுத்ததாகவும், வீட்டை காலி செய்யும் போது தொகையை திருப்பி தருவது என ஒப்பந்தம் உள்ள நிலையில், வீட்டின் உரிமையாளரான விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது தேவைக்காக வங்கி மூலம் கடன் பெற்று உள்ளதாக தெரிவித்தனர்.

வங்கியில் பெற்ற கடனை முறையாக செலுத்தாத காரணத்தினால் வங்கி மூலம் ஏலம் விடப்பட்ட வீட்டை துரைராஜ் என்பவர் வாங்கி உள்ளார். தற்போது, அந்த வீட்டை வாங்கிய நபர் வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், தாங்கள் போகியத்திற்கு பணம் கொடுத்து உள்ளோம் எனக் கூறிய போது, அதை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது, உடனடியாக காலி செய்யுங்கள் என மிரட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இது குறித்து விஜயகுமாரிடம் கூறினால், வீடு விற்கப்பட்டு விட்டது. உடனடியாக காலி செய்யுங்கள் என ஆட்களை வைத்து மிரட்டுவதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறும் பாதிக்கப்பட்டவர்கள், போகியத்திற்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்றும், அதுவரை அங்கேயே குடியிருக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் இன்று மனு அளித்தனர்.
கணபதி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் விஜயகுமார். இவரது குடியிருப்பில் உள்ள அடுக்குமாடி வீடுகளில் நான்கு குடும்பங்கள் சில வருடங்களுக்கு முன்பு போகியத்திற்கு குடி வந்தது. போகிய தொகையாக மூன்றரை லட்சம் கொடுத்ததாகவும், வீட்டை காலி செய்யும் போது தொகையை திருப்பி தருவது என ஒப்பந்தம் உள்ள நிலையில், வீட்டின் உரிமையாளரான விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது தேவைக்காக வங்கி மூலம் கடன் பெற்று உள்ளதாக தெரிவித்தனர்.

வங்கியில் பெற்ற கடனை முறையாக செலுத்தாத காரணத்தினால் வங்கி மூலம் ஏலம் விடப்பட்ட வீட்டை துரைராஜ் என்பவர் வாங்கி உள்ளார். தற்போது, அந்த வீட்டை வாங்கிய நபர் வீட்டை காலி செய்ய சொல்லி வற்புறுத்தி வருவதாகவும், தாங்கள் போகியத்திற்கு பணம் கொடுத்து உள்ளோம் எனக் கூறிய போது, அதை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது, உடனடியாக காலி செய்யுங்கள் என மிரட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இது குறித்து விஜயகுமாரிடம் கூறினால், வீடு விற்கப்பட்டு விட்டது. உடனடியாக காலி செய்யுங்கள் என ஆட்களை வைத்து மிரட்டுவதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறும் பாதிக்கப்பட்டவர்கள், போகியத்திற்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்றும், அதுவரை அங்கேயே குடியிருக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் இன்று மனு அளித்தனர்.