கோவை : கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி அருகே கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை சீர் வரிசையுடன் கிராம மக்கள் வரவேற்றனர்.
கோவை : கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி அருகே கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை சீர் வரிசையுடன் கிராம மக்கள் வரவேற்றனர்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதில், கோவை எட்டிமடை அடுத்த கே.ஜி. சாவடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு இன்று வந்த மாணவர்களை, அந்த கிராம மக்கள் சீர்வரிசையுடன் வரவேற்றனர். பொதுமக்கள் ஒன்று கூடி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள அனைத்து வகுப்பறைகளுக்கான முதலுதவி பெட்டி, பீரோ, நாற்காலி, குடம் என 42 பொருட்களை பள்ளி மாணவர்களுக்காக வழங்கினர். கடந்த ஆண்டு இந்தப் பள்ளியில் துவங்கப்பட்ட பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கிய கிராம மக்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நன்றி தெரிவித்தார்..