கோவை : முறையாக சம்பளம் வழங்காத தனியார் நிறுவனத்தின் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் மனு அளித்துள்ளனர்.
கோவை : முறையாக சம்பளம் வழங்காத தனியார் நிறுவனத்தின் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியில் சர்வால் இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளது. காகித மெஷின்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாகம் முறையாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் அங்கு பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்காமலும், தொழிலாளர்களிடத்தில் ஓய்வூதியத் தொகை மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி செலுத்தாமல் உள்ளதால், மருத்துவ உதவி கிடைக்கப் பெறாமல் அவதிப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.
இது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் நேரிடையாகவும், தொழிலாளர் நலத்துறை மூலமாக பேசியும், இதுவரை தீர்வு ஏற்படாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சி.ஐ.டி.யு மற்றும் பி.எம்.எஸ் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியில் சர்வால் இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளது. காகித மெஷின்கள் தயாரிக்கும் இந்நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாகம் முறையாக சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், இதனால் அங்கு பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்காமலும், தொழிலாளர்களிடத்தில் ஓய்வூதியத் தொகை மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி செலுத்தாமல் உள்ளதால், மருத்துவ உதவி கிடைக்கப் பெறாமல் அவதிப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.
இது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் நேரிடையாகவும், தொழிலாளர் நலத்துறை மூலமாக பேசியும், இதுவரை தீர்வு ஏற்படாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சி.ஐ.டி.யு மற்றும் பி.எம்.எஸ் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் மனு அளித்தனர்.