கோவை : மறுபிரேதப் பரிசோதனையில் மார்ட்டின் நிறுவன ஊழியர் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை : மறுபிரேதப் பரிசோதனையில் மார்ட்டின் நிறுவன ஊழியர் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 3-ம் தேதி லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்பத்தினர் இன்று மனு ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிச்சாமியின் மகன் ரோகின்குமார் மற்றும் மனைவி சாந்தாமணி ஆகியோர் பேசியதாவது :- மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பழனிச்சாமியின் உடலை பெற்றுக் கொள்ளாவிட்டால், அவரது உடலை எரித்து விடப்போவதாக காரமடை உதவி ஆய்வாளர் நாகராஜ் என்பவர் மிரட்டுகிறார். எனவே, பழனிச்சாமியின் உடலை பதப்படுத்தி பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அவரது அறிவுரையின் பேரில் அரசு மருத்துவனை தலைவரிடமும் மனு அளிக்க உள்ளோம்.

மேலும், நீதிமன்ற நடைமுறைகள் அமலில் இருக்கும் போது, மார்ட்டினின் தூண்டுதலால் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இதுபோன்று மிரட்டி வருகின்றனர். மறு பிரேதப் பரிசோதனையில் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம். தங்களை எந்த அரசியல் கட்சியும் இயக்கவில்லை, என அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் 3-ம் தேதி லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்பத்தினர் இன்று மனு ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிச்சாமியின் மகன் ரோகின்குமார் மற்றும் மனைவி சாந்தாமணி ஆகியோர் பேசியதாவது :- மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பழனிச்சாமியின் உடலை பெற்றுக் கொள்ளாவிட்டால், அவரது உடலை எரித்து விடப்போவதாக காரமடை உதவி ஆய்வாளர் நாகராஜ் என்பவர் மிரட்டுகிறார். எனவே, பழனிச்சாமியின் உடலை பதப்படுத்தி பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். அவரது அறிவுரையின் பேரில் அரசு மருத்துவனை தலைவரிடமும் மனு அளிக்க உள்ளோம்.

மேலும், நீதிமன்ற நடைமுறைகள் அமலில் இருக்கும் போது, மார்ட்டினின் தூண்டுதலால் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இதுபோன்று மிரட்டி வருகின்றனர். மறு பிரேதப் பரிசோதனையில் பழனிச்சாமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே உடலைப் பெற்றுக்கொள்வோம். தங்களை எந்த அரசியல் கட்சியும் இயக்கவில்லை, என அவர்கள் தெரிவித்தனர்.