கோவை : கோவையில் கட்டுமானப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவனின் இழப்பிற்கு வழங்குவதாகக் கூறியிருந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்று தரகோரி கணவரை இழந்த பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை : கோவையில் கட்டுமானப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவனின் இழப்பிற்கு வழங்குவதாகக் கூறியிருந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்று தரகோரி கணவரை இழந்த பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
திருச்சி அருகே மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி லட்சுமி. இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர்கள், வடவள்ளி அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் ரகுபதி, ரேவதி, மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் வடவள்ளியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வருடம் ஒண்டிப்புதூர் அருகே உள்ள கட்டுமானப் பணி வேலைக்கு கொத்தனார் பழனிச்சாமி என்பவர் மூலம் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெரியசாமி, கடப்பாரையால் மண்ணைத் தோண்டிய போது, நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டு இருந்த மின் வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், பலத்த காயத்துடன் மயக்கமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, பெரியசாமியின் குடும்பத்திற்கு வீட்டின் உரிமையாளர் மாணிக்கவாசகம் இழப்பீட்டுத் தொகையாக 6 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அவரது வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளார் மாணிக்கவாசகம். ஆனால், வழக்கறிஞர் காசோலையின் நகலை பெரியசாமியின் குடும்பத்திடம் கொடுத்துவிட்டு, பின்னர் அசல் காசோலையைத் தருவதாக உறுதியளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, தற்போது வரை அசல் காசோலையைக் கொடுக்காமல், மாணிக்கவாசகம் தரப்பினர் ஏமாற்றி வருவதாகவும், இழப்பீட்டுத் தொகையைக் கேட்டால், சட்ட ரீதியாகப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறுவதாகவும் பெரியசாமியின் மனைவி லட்சுமி கூறுகின்றனர்.
இந்த நிலையில், தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தங்களுக்கு தருவதாக வாக்குறுதி அளித்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என லட்சுமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.