திருப்பூர் : திருப்பூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கூலித் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கூலித் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே இன்று காலை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கையில் சடலமாக மீட்கப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செபாஸ்டியர் என்பதும், அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை திருப்பூர் ரயில்வே கூட்செட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் எனவும் தெரிந்தது. சடலமாக மீட்கப்பட்ட செபாஸ்டியரிடம் இருந்து ஆறு செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே இன்று காலை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கையில் சடலமாக மீட்கப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செபாஸ்டியர் என்பதும், அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை திருப்பூர் ரயில்வே கூட்செட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் எனவும் தெரிந்தது. சடலமாக மீட்கப்பட்ட செபாஸ்டியரிடம் இருந்து ஆறு செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.