கோவை : கோடை மழை வழக்கத்தை விட குறைவாக பெய்ததன் காரணமாக கோவை மாவட்டத்தின் நீராதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது.
கோவை : கோடை மழை வழக்கத்தை விட குறைவாக பெய்ததன் காரணமாக கோவை மாவட்டத்தின் நீராதாரமாக இருக்கும் சிறுவாணி அணையின் நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது.
கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக சிறுவாணி நீர்த்தேக்கமும் இருந்து வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து சாடிவயல் குடிநீர் நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகருக்கு கடந்த சில வாரங்களாக விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை மழையின் அளவு மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், சிறுவாணி நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு மளமளவென குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கோவை மாநகருக்கு ஜுன் மாதம் இறுதி வரையில் மட்டும் குடிநீர் விநியோகிக்க முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவாணி அணையின் மூலம் 22 கிராமங்கள் மற்றும் கோவை மாநகராட்சியின் 23 வார்டுகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக சிறுவாணி நீர்த்தேக்கமும் இருந்து வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து சாடிவயல் குடிநீர் நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகருக்கு கடந்த சில வாரங்களாக விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை மழையின் அளவு மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், சிறுவாணி நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு மளமளவென குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கோவை மாநகருக்கு ஜுன் மாதம் இறுதி வரையில் மட்டும் குடிநீர் விநியோகிக்க முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவாணி அணையின் மூலம் 22 கிராமங்கள் மற்றும் கோவை மாநகராட்சியின் 23 வார்டுகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.