சிறுமுகை வனப்பகுதியில் புள்ளி மானை வேட்டையாடிய இருவர் கைது

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியின் மூலம் புள்ளி மானை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியின் மூலம் புள்ளி மானை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் புள்ளி மான், காட்டெருமை, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானி ஆற்று நீர் தேக்கப்பகுதியில் தண்ணீர் தேடி வரும் புள்ளி மான்களை வேட்டையாடி, அதன் இறைச்சியினை விற்பனைக்காக எடுத்து செல்வதாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, பெத்திக்குட்டை கருப்பராயன் கோவில் சரக பகுதியில் சிறுமுகை வனச்சரகர் மனோகரன், வனவர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 15 பேர் அடங்கிய குழுவினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருப்பராயன் கோயில் பகுதியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு வனத்துறையினர் வனப்பகுதியில் 3 குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, 3 இருசக்கர வாகனங்களில் ஏழு பேர் கொண்ட மர்ம நபர்கள் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அதில், இரண்டு பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், 2 இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர், வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சிட்டே பாளையம் பெரியதோட்டம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் தேவராஜ் (45), சம்பர வள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் குமாரசாமி (45) ஆகியோர் என தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 15 கிலோ எடையுள்ள மான் இறைச்சி, ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி, வெடி பொருட்கள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.



பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவிநாசி பகுதியைச் சேர்ந்த அழகிரி சாமி என்பவருக்கு விற்பனை செய்ய 7 பேர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், பகலில் விவசாயப் பணியிலும், இரவில் வேட்டையாடும் பணியிலும் இக்கும்பல் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தேவராஜ், குமாரசாமி ஆகியோரை வனத்துறையினர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...