கோவை : தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை : தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் வங்கிகள், கடைகள், திரையரங்குகள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கான அனுமதி அளிக்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், கடைகளை 24 மணிநேரமும் இயக்குவதற்கு உரிய அனுமதியை மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம், கடைகள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கு அனுமதி அளித்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க தொழிலாளர் ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். இதற்கு தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் வங்கிகள், கடைகள், திரையரங்குகள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கான அனுமதி அளிக்கும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், கடைகளை 24 மணிநேரமும் இயக்குவதற்கு உரிய அனுமதியை மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம், கடைகள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் 24 மணிநேரமும் செயல்படுவதற்கு அனுமதி அளித்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகள் அடிப்படையில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க தொழிலாளர் ஆணையர் பரிந்துரை செய்துள்ளார். இதற்கு தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.