சென்னை : தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக பி. துரைராசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக பி. துரைராசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அரசு ரப்பர் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வரும் இவர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த மல்லேசப்பாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். பி. துரைராசு வனத்துறையில் முனைவர் பட்டமும், விவசாயத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். 1985-ம் ஆண்டு முதல் இந்திய வனத்துறை பணி அதிகாரியாக தேர்வான இவர், வனத்துறையில் 34 வருடங்கள் பணி அனுபவம் பெற்றவர். வேளாண் வனவியல், வனக் கல்வி குறித்த புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
இதேபோல, 2016-ம் ஆண்டு கோவை மாவட்டத்தின் முன்னாள் வன பாதுகாவலராக இருந்த ஐ. அன்வரூதின், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகவும், தமிழக வனத்துறை அகாடமியின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வனத்துறையின் முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர், அன்வரூதினை சேலம் வட்டத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநராகவும் பணியாற்றினார்.
தற்போது அரசு ரப்பர் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வரும் இவர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த மல்லேசப்பாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். பி. துரைராசு வனத்துறையில் முனைவர் பட்டமும், விவசாயத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். 1985-ம் ஆண்டு முதல் இந்திய வனத்துறை பணி அதிகாரியாக தேர்வான இவர், வனத்துறையில் 34 வருடங்கள் பணி அனுபவம் பெற்றவர். வேளாண் வனவியல், வனக் கல்வி குறித்த புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
இதேபோல, 2016-ம் ஆண்டு கோவை மாவட்டத்தின் முன்னாள் வன பாதுகாவலராக இருந்த ஐ. அன்வரூதின், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகவும், தமிழக வனத்துறை அகாடமியின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வனத்துறையின் முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர், அன்வரூதினை சேலம் வட்டத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநராகவும் பணியாற்றினார்.