சென்னை : நாடு முழுவதும் பள்ளிகளில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை : நாடு முழுவதும் பள்ளிகளில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 8-ம் வகுப்பு வரை இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என்ற மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அமலில் இருக்கும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்களிலும் கட்டாய இந்தி என்ற மத்திய அரசின் பரிந்துரை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த மும்மொழிக் கொள்கை குறித்து 30-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் மும்மொழிக்கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது. தமிழகத்தில் தற்போது இருக்கும் இருமொழிக்கல்விக் கொள்கையே தொடரும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுத இருக்கிறார்," என்றார்.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 8-ம் வகுப்பு வரை இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என்ற மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அமலில் இருக்கும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்களிலும் கட்டாய இந்தி என்ற மத்திய அரசின் பரிந்துரை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த மும்மொழிக் கொள்கை குறித்து 30-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் மும்மொழிக்கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது. தமிழகத்தில் தற்போது இருக்கும் இருமொழிக்கல்விக் கொள்கையே தொடரும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுத இருக்கிறார்," என்றார்.