சென்னை : அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சுடிதார் அணியும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிய வேண்டுமெனவும், ஆண் பணியாளர்கள் டி-சர்ட் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை : அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சுடிதார் அணியும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிய வேண்டுமெனவும், ஆண் பணியாளர்கள் டி-சர்ட் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆடை அணிந்து வருவதில் சில கட்டுப்பாடு விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் பணி புரியும் ஆண், பெண் ஊழியர்கள் நாகரீக உடை என சில ஆடைகளை அணிந்து வருவது தேவையில்லாத பிரச்சனைகளையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புகாரை தொடர்ந்து ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைச் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் "அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மையான ஆடைகளை அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார், சல்வார்கமிஸ் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து வரலாம். ஆனால், சுடிதார் மற்றும் சல்வார்கமிஷ் அணிந்து வரும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும். இதேபோல, ஆண்கள் சாதாரண பேண்ட், சட்டை அணிந்து பணிக்கு வரலாம். டீ-சார்டுடன் வருவதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் ஆண்கள் கோட் அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார் அணிந்து செல்லலாம். ஆனால், துப்பட்டா கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும்“ என கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆடை அணிந்து வருவதில் சில கட்டுப்பாடு விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் பணி புரியும் ஆண், பெண் ஊழியர்கள் நாகரீக உடை என சில ஆடைகளை அணிந்து வருவது தேவையில்லாத பிரச்சனைகளையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புகாரை தொடர்ந்து ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைச் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் "அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மையான ஆடைகளை அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார், சல்வார்கமிஸ் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து வரலாம். ஆனால், சுடிதார் மற்றும் சல்வார்கமிஷ் அணிந்து வரும் போது துப்பட்டா கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும். இதேபோல, ஆண்கள் சாதாரண பேண்ட், சட்டை அணிந்து பணிக்கு வரலாம். டீ-சார்டுடன் வருவதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் ஆண்கள் கோட் அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார் அணிந்து செல்லலாம். ஆனால், துப்பட்டா கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும்“ என கூறப்பட்டுள்ளது.