திருப்பூர் : உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபரை திருப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் : உலக நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகக் கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபரை திருப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் - அவிநாசி சாலையில், பங்ளா நிறுத்தம் பகுதியில் 'டிராவல் கிராப்ட்' என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன். இவரிடம் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் குடும்பமாகவும், தனி நபராகவும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுலா செல்ல திட்டமிட்டு, பயணச்சீட்டிற்காக ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை கொடுத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு பணமாக மாற்றி கொடுக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை மற்றொரு புறம் வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், விசா மற்றும் பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட தேதியில் வெளிநாடு அழைத்து செல்லாமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கச் செய்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்ப்ட்டவர்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்த போது, அலுவலகத்தை பூட்டிவிட்டு மணிகண்டன் தலைமறைவானது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சுற்றுலா அழைத்து.செல்லவதாகக் கூறி ஒரு கோடிக்கும் மேல் பணம் மோசடியில் ஈடுபட்ட மணிகண்டனிடமிருந்து பணத்தையும், பாஸ்போர்ட்டை மீட்டுத்தர கோரி புகார் அளித்தனர்.

இந்த நிலையில், டிராவல் கிராப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டனை போலீசார் கைது செய்து, ஜெ.எம்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி கவியரசன் மணிகண்டனுக்கு 15 நாள் நீதிமன்ற நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் - அவிநாசி சாலையில், பங்ளா நிறுத்தம் பகுதியில் 'டிராவல் கிராப்ட்' என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன். இவரிடம் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் குடும்பமாகவும், தனி நபராகவும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுலா செல்ல திட்டமிட்டு, பயணச்சீட்டிற்காக ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை கொடுத்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு பணமாக மாற்றி கொடுக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை மற்றொரு புறம் வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், விசா மற்றும் பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட தேதியில் வெளிநாடு அழைத்து செல்லாமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கச் செய்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்ப்ட்டவர்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்த போது, அலுவலகத்தை பூட்டிவிட்டு மணிகண்டன் தலைமறைவானது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சுற்றுலா அழைத்து.செல்லவதாகக் கூறி ஒரு கோடிக்கும் மேல் பணம் மோசடியில் ஈடுபட்ட மணிகண்டனிடமிருந்து பணத்தையும், பாஸ்போர்ட்டை மீட்டுத்தர கோரி புகார் அளித்தனர்.

இந்த நிலையில், டிராவல் கிராப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டனை போலீசார் கைது செய்து, ஜெ.எம்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி கவியரசன் மணிகண்டனுக்கு 15 நாள் நீதிமன்ற நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.