கோவை : அன்னூர் தாலுக்கா வெள்ளமடை ஊராட்சியில் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கோவை : அன்னூர் தாலுக்கா வெள்ளமடை ஊராட்சியில் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்கா, வெள்ளமடை ஊராட்சியில் கிராம ஊராட்சி அலுவலகத்திலிருந்து காலை 9.30 மணியளவில் 300 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டும், பிரச்சாரங்கள் வழங்கியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணி சுமார் 2 கி.மீ. தொலைவு நடைபெற்றது. இப்பேரணியைத் தொடர்ந்து, 10 மாணவர்கள் சாமநாயக்கன்பாளையம் பள்ளி சுவர்களில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.
மேலும், வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைத்தல் குறித்த கருத்தரங்கில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காய்கறிப் பயிர்கள் துறையின் இணைப்பேராசிரியர் அ. சங்கர், வீட்டுக்காய்கறித் தோட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதன் பயன்களையும் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், மண்புழு உரம் தயாரிக்கும் முறையையும், அதன் முக்கியத்துவத்தையும் சுற்றுச்சூழல் துறையின் துணைப்பேராசிரியர் ர. சுனிதா விளக்கினார்.
மாலையில் உழவியல் துறையின் இணைப் பேராசிரியர் ந. தவபிரகாஷ், வேளாண் சாகுபடியில் நவீன தொழில்நுட்ப உத்திகள், பயிர் சுழற்சி, மண் வளம் ஆகியன குறித்து ஆலோசனை வழங்கினார். அவர் “மண்ணிற்கு உரமிடம் வேண்டும் பயிருக்கு அல்ல” என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, வெள்ளமடை கிராம சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்கா, வெள்ளமடை ஊராட்சியில் கிராம ஊராட்சி அலுவலகத்திலிருந்து காலை 9.30 மணியளவில் 300 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டும், பிரச்சாரங்கள் வழங்கியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணி சுமார் 2 கி.மீ. தொலைவு நடைபெற்றது. இப்பேரணியைத் தொடர்ந்து, 10 மாணவர்கள் சாமநாயக்கன்பாளையம் பள்ளி சுவர்களில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.
மேலும், வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைத்தல் குறித்த கருத்தரங்கில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காய்கறிப் பயிர்கள் துறையின் இணைப்பேராசிரியர் அ. சங்கர், வீட்டுக்காய்கறித் தோட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதன் பயன்களையும் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், மண்புழு உரம் தயாரிக்கும் முறையையும், அதன் முக்கியத்துவத்தையும் சுற்றுச்சூழல் துறையின் துணைப்பேராசிரியர் ர. சுனிதா விளக்கினார்.
மாலையில் உழவியல் துறையின் இணைப் பேராசிரியர் ந. தவபிரகாஷ், வேளாண் சாகுபடியில் நவீன தொழில்நுட்ப உத்திகள், பயிர் சுழற்சி, மண் வளம் ஆகியன குறித்து ஆலோசனை வழங்கினார். அவர் “மண்ணிற்கு உரமிடம் வேண்டும் பயிருக்கு அல்ல” என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, வெள்ளமடை கிராம சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.