குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதர் போல் மண்டிக் கிடக்கும் பார்த்தீனியச் செடிகள் : பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு

நீலகிரி : கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டபெட்டு, பில்லிக்கம்பை, உபதலை போன்ற சாலையில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி : கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டபெட்டு, பில்லிக்கம்பை, உபதலை போன்ற சாலையில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



கோத்தகிரி, கட்டபெட்டு - பில்லிக்கம்பை சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. இச்சாலையின் இருபுறங்களிலும் விஷத்தன்மை கொண்ட பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. நீண்ட நாட்களாக செடிகள் அகற்றப்படாததால், காற்று வீசும் திசைகளில் விதைகள் உதிர்ந்து, புதிதாக செடிகள் முளைத்து புதர் போல் காட்சியளிக்கின்றன. மேலும், தற்போது இரவு நேரத்தில் மழைப் பெய்து வருவதால், இவற்றின் வளர்ச்சி அசுரவேகத்தில் உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர், விவசாயிகள் உட்பட பெரும்பாலான மக்கள் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், ஆஸ்துமா, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 



மேலும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளை அகற்றி நிலத்தை பண்படுத்துவதற்காக எரிக்கும் போது, புகை மண்டலமாக மாறுவதால், மக்கள் கடுமையாகப் பாதித்து வருகின்றனர். இதுதவிர, செடிகளால் கால்நடைகளுக்கு உடல் உபாதை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் விஷத்தன்மை கொண்ட பார்த்தீனியம் செடிகளை, வேரோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...