மோடி தலைமையிலான அமைச்சரவையில் அ.தி.மு.க.விற்கு இடமில்லை : ஓ.பி.எஸ். அதிர்ச்சி

கோவை : மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.விற்கு இடமளிக்காதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.விற்கு இடமளிக்காதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17-வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. குடியரசு தலைவரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்தா கவுடா, நிர்மலா சீதாராமன் ராம் விலாஸ் பஸ்வான், நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிம்ரத் கவுர் பாதல், தவார் சந்த் கெலாட், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ரமேஷ் பொக்ரியால், அர்ஜுன் முண்டா, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 58 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மேலும், 24 இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால், இவர்களில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எவரும் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். இதனால், மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத் குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு பதவி கிடைப்பதற்காக அ.தி.மு.க. வின் மூத்த தலைவர்கள டெல்லியில் முகாமிட்டிருந்தனர். இதனால், மோடியின் அமைச்சரவையில் அ.தி.மு.க. நிச்சயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.விற்கு இடமளிக்காதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...