நீலகிரி : குன்னூர் ரேலியா அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி : குன்னூர் ரேலியா அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவான 43.9 அடியில் 30.2 அடி நீர் இருப்பு உள்ளது. இங்குள்ளதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் குன்னூரில் உள்ள 30 வார்டிற்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நீண்ட காலமாக குன்னூர் பகுதிக்கு 15 நாட்கள் அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் தினமும் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண்ணீர் கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், குன்னூர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரேலியா அணையில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த இரு நாட்களாக குன்னூர் நகர் பகுதியில் மழைப்பெய்தாலும், அணைப் பகுதியில் இந்த மழைப் பெய்யும் பட்சத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை ஒரளவு சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவான 43.9 அடியில் 30.2 அடி நீர் இருப்பு உள்ளது. இங்குள்ளதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் குன்னூரில் உள்ள 30 வார்டிற்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நீண்ட காலமாக குன்னூர் பகுதிக்கு 15 நாட்கள் அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் தினமும் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண்ணீர் கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், குன்னூர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரேலியா அணையில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த இரு நாட்களாக குன்னூர் நகர் பகுதியில் மழைப்பெய்தாலும், அணைப் பகுதியில் இந்த மழைப் பெய்யும் பட்சத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை ஒரளவு சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.