வெள்ளலூர் பேரூராட்சி நிர்வாகம் மீது துப்புரவு தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : விதிமுறைகளை பின்பற்றாத வெள்ளலூர் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளலூர் குப்பை கிடங்கு துப்புரவு தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : விதிமுறைகளை பின்பற்றாத வெள்ளலூர் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளலூர் குப்பை கிடங்கு துப்புரவு தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூரில் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பற்றி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும், இதனை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 



இங்கு நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மற்றும் 36 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், பல வருடமாக பணியாற்றி வரும் தங்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதாகவும், இ.எஸ்.ஐ., பி.எப். இன்சூரன்ஸ் என பிடித்தம் செய்யபடுவது இல்லை எனவும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் தூய்மை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், தங்களது கோரிக்கை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, என்றனர்.



இந்த நிலையில், தினக்கூலியை உயர்த்தி கேட்டதன் காரணமாக, ஒருமையில் பேசி இனி தொடர்ந்து பணி வழங்க முடியாது எனக் கூறியதாக பேரூராட்சி நிர்வாகம் மீது வெள்ளலூர் பேரூராட்சி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கு. இராசமணியிடம் மனு அளித்தனர். மேலும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பல்வேறு பரிந்துரைகள் நடைமுறைபடுத்தாத இந்த மனுவை சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனருக்கும் அனுப்பி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...