கோவை : பா.ஜ.க., அரசு மத்தியில் இன்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பு ஏற்க உள்ள நிலையில், அமைச்சரவையில் ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை : பா.ஜ.க., அரசு மத்தியில் இன்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பு ஏற்க உள்ள நிலையில், அமைச்சரவையில் ஓ.பி.எஸின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ள நிலையில், தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். தமிழகத்தில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தாலும், நாடு முழுவதும் அக்கட்சி 303 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இன்று மாலை மோடி பிரதமராக 2 ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் யார், யார் இடம் பெற வேண்டும் என்பது குறித்து மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 3-வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே, பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன், நிதின் கட்கரி, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண்ஜெட்லி உடல்நலக்குறைவால் மத்திய அமைச்சரவை பொறுப்பில் இருந்து விலகுவதாக மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். எனவே, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சராகலாம் என கூறப்படுகிறது. இதே போல் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், கூட்டணி தர்மப்படி அ.தி.மு.க.வுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுளளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான போது, மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்படத்தக்கது.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ள நிலையில், தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். தமிழகத்தில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தாலும், நாடு முழுவதும் அக்கட்சி 303 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இன்று மாலை மோடி பிரதமராக 2 ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் யார், யார் இடம் பெற வேண்டும் என்பது குறித்து மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 3-வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே, பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன், நிதின் கட்கரி, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண்ஜெட்லி உடல்நலக்குறைவால் மத்திய அமைச்சரவை பொறுப்பில் இருந்து விலகுவதாக மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். எனவே, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சராகலாம் என கூறப்படுகிறது. இதே போல் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், கூட்டணி தர்மப்படி அ.தி.மு.க.வுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுளளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான போது, மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்படத்தக்கது.