கோவையில் தகாத உறவுக்காக 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு : தாயிக்கு ஜுன் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை : கோவையில் தகாத உறவுக்காக 3 வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயை வரும் ஜூன் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை இரண்டாவது விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் தகாத உறவுக்காக 3 வயது சிறுமியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயை வரும் ஜூன் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை இரண்டாவது விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் ரூபினி தம்பதிகளின் மகள் தேவிஸ்ரீ (3). இந்த சிறுமி இன்று காலை சரவணம்பட்டி கரட்டுமேடு அருகே உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். மேலும், சிறுமியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்தன. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் தாய் ரூபினிக்கு தமிழ்ச்செல்வன் என்பவருடன் தகாத உறவு இருந்து வந்தது தெரிய வந்தது. மேலும், நேற்று சிறுமியின் தாயாரும், தகாத உறவுக் காதலனுமான தமிழ்ச்செல்வனும் குழந்தையை வெளியே அழைத்து சென்ற நிலையில், அவர் சிறுமியை தனியே அழைத்துச் சென்று அடித்து கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, சிறுமியின் தாயாரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் தகாத உறவுக் காதலன் தமிழ்ச்செல்வனை கைது செய்ய தீவிரம் காட்டியுள்ளனர். 

மேலும், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை குழுவினர்கள் ஆய்வாளர் காந்தி, உதவி ஆய்வாளர்கள் பாரதிராஜா, அய்யாசாமி ஆகியோர் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் ரூபினியை வரும் ஜூன் 12-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோவை இரண்டாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் உத்தரவிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...