குன்னூரில் பெய்த மழைக்கு சாலையில் ராட்சத மரம் விழுந்து விபத்து : இருசக்கர வாகனத்தில் வந்த ராணுவ வீரர் பலி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த மழையின் காரணமாக மலைப்பா‌தையில் ராட்சத மரம் விழுந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த மழையின் காரணமாக மலைப்பா‌தையில் ராட்சத மரம் விழுந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். 



குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பர்லியார், காட்டேரி, மரப்பாலம் மற்றும் அருவங்காடு பகுதிகளில் நேற்றிரவு விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையினால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் மரப்பாலம், காட்டேரி பூங்கா இடையே ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுார் நோக்கி வந்த இருசக்கர வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சேதமடைந்தன. 



இந்த விபத்தில், பாலக்காடு மாவட்டம் முத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் பிரதீப் (26) மற்றும் பிரதீஷ் (27) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ராட்சத மரத்தின் அடியில் சிக்கிக் கொண்ட பிரதீப்பை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பிரதீஷ் குன்னுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், காரில் வந்த சுற்றுலா பயணிகள் காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 



உயிரிழந்த பிரதீப் கோவை ராணுவ மையத்தில் பயற்சி பெற்று வரும் ராணுவ வீரர் ஆவார். இந்த சம்பவம் குறித்து வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...