நீலகிரியில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் சோதனை

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தினார்.



கோடை விடுமுறை முடிந்து இன்னும் ஒரு சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளின் பேருந்துகளின் தர நிர்ணயம் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் மாவட்டத்தில் உள்ள 257 பள்ளி மினி பேருந்துகள், பெரிய பேருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. 



வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில், பேருந்து இருக்கை, அவசர கால வழி, முதலுதவிப்பெட்டி, தீயணைப்பு சிலிணடர், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உட்பட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் செய்யப்பட்டது. அப்போது, முறையாக பராமரிக்கப்படாத பள்ளி பேருந்துகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...