தடாகம் பகுதியில் தடுக்கப்படாத மணல் கொள்ளை : பட்டப்பகலில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை (வீடியோ)

கோவை : தடாகம் அருகே சட்டவிரோதமாக பட்டப்பகலில் மணல் கொள்ளை சம்பவம் அரங்கேறி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : தடாகம் அருகே சட்டவிரோதமாக பட்டப்பகலில் மணல் கொள்ளை சம்பவம் அரங்கேறி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தடாகம் அருகே உள்ள மலையடிவாரத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோவை மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து, அடுக்கடுக்கான புகார் மனுக்களை அளித்து வருகின்றனர். இதையடுத்து, மணல் கொள்ளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறையினரும் மேற்கொண்டனர். இந்த நிலையில், தடாகம் பகுதியில் உள்ள மாங்கரை - வீரபாண்டி செல்லும் சாலையில் பட்டப்பகலில் மணல் கடத்திச் செல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் லாரிகளில் மணல் நிரப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 



மலையடிவாரப் பகுதிகளில் 3 அடிக்கு மட்டுமே மணல் எடுக்க செங்கல் சூளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 50 அடிக்கும் அதிகமாக பள்ளம் தோண்டப்பட்ட மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதாக சின்னத்தம்பி மற்றும் விநாயகன் ஆகிய காட்டு யானைகள் பிடித்து இடமாற்றம் செய்யப்பட்ட போது, இனி மணல் கொள்ளை அதிகரித்து சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்களும், அறிவியலறிஞர்களும் கூறியிருந்தனர். அவர்களின் கூற்று உண்மை என்பதற்கு, தற்போதைய மணல் கொள்ளை சம்பவங்களே சாட்சியாகும். 

அதுமட்டுமில்லாமல், யானைகள் அனுபவ வல்லுநர் அஜய் தேசாய், கடந்த டிசம்பர் மாதம் வனத்துறையினருக்கு அளித்துள்ள அறிக்கையில், மணல் கொள்ளை சம்பவங்களே, மனித - யானைகள் மோதலுக்கு வழிவகுப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார். 



நீர்நிலைகள் பாதிப்பிற்கு இதுபோன்ற மணல் கொள்ளை சம்பவங்களே முக்கிய காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த புகாரின் பேரில், பெரிய தடாகம் பகுதியில் மணல் கொள்ளைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாதை அடைக்கப்பட்டது. மணல் கொள்ளை குறித்து புகார்கள் வரும் போது, பாதையை அடைக்க மட்டுமே முடிந்த கோவை மாவட்ட நிர்வாகத்தினால், மணல் கொள்ளையைத் தடுக்க முடியவில்லை என்பது அனைவரிடத்திலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...