நீலகிரி : முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்குட்பட்ட வனப் பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பிய நிலையில், அங்கு புலிகள் நடமாட்டம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நீலகிரி : முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்குட்பட்ட வனப் பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பிய நிலையில், அங்கு புலிகள் நடமாட்டம் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக, முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி உள்ளிட்ட இடங்களின் வனப்பகுதிகள் வறண்டு கிடந்ததால் வன விலங்குகளின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இப்பகுதியில் மழை பெய்ததால் இந்தப் பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளது. மேலும், வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் கிடைத்து வருவதால், மசினகுடி பகுதியி்ல் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மசினக்குடி சாலையின் ஓரத்திலேயே புலி நடமாடியதை மசினகுடி - உதகை சாலையில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர். இதனிடையே, புலிகள் நடமாட்டம் இருப்பதால், மசினக்குடி பகுதி தற்போது செழிப்பாக இருப்பதாக வன ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக, முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி உள்ளிட்ட இடங்களின் வனப்பகுதிகள் வறண்டு கிடந்ததால் வன விலங்குகளின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இப்பகுதியில் மழை பெய்ததால் இந்தப் பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளது. மேலும், வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் கிடைத்து வருவதால், மசினகுடி பகுதியி்ல் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மசினக்குடி சாலையின் ஓரத்திலேயே புலி நடமாடியதை மசினகுடி - உதகை சாலையில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர். இதனிடையே, புலிகள் நடமாட்டம் இருப்பதால், மசினக்குடி பகுதி தற்போது செழிப்பாக இருப்பதாக வன ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.