கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டார்.
கோவை : வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டார்.
கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளலூர் பகுதியில் சுமார் 690 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதும் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதும் இந்த புகை மூட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தக் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை இரவு பகலாக போராடி தீயணைப்புத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அணைத்தனர்.
இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டார். அவருடன் மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோவை போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளலூர் பகுதியில் சுமார் 690 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடிப்பதும் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதும் இந்த புகை மூட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகவே உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தக் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை இரவு பகலாக போராடி தீயணைப்புத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அணைத்தனர்.
இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீ தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் பார்வையிட்டார். அவருடன் மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.