போலி ஆதார்டு கார்டு தயாரித்து திருப்பூரில் பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 19 இளைஞர்கள் கைது

திருப்பூர் : திருப்பூரில் போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து, முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 19 வங்கதேச நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து, முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 19 வங்கதேச நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.



பின்னலாடை தொழில் நகரமான திருப்பூருக்கு வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்து ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அத்திமர தோட்டப் பகுதியில் தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வங்கதேச இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், வங்கதேச இளைஞர்கள் ஒரு குழுவாக அவர்கள் நாட்டில் இருந்து கள்ளத்தோணி மூலம் மேற்குவங்கம் வந்தது தெரிய வந்தது. மேலும், அங்கு சில நாட்கள் தங்கி இருந்து போலியாக ஆதார் கார்டு தயாரித்து, அதன் பிறகு திருப்பூர் வந்து கடந்த சில ஆண்டுகளாக பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 



மேலும், இவர்களிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களும் முறையாக இல்லாத காரணத்தால் சுமன், சமீம், அப்துல் கலாம் உள்ளிட்ட 19 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். 



இதேபோல, கடந்த 6 மாதத்திற்கு முன்பு முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த 16 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...