கோவை : குனியமுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் மயிலை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை : குனியமுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் மயிலை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

குனியமுத்தூர் அருகே உள்ள திருநாவுக்கரசு நகரில் பறவைகளுடன் சுற்றித்திரிந்த பெண் மயில் ஒன்று எதிர்பாராதவிதமாக, நேற்று மாலை 5.30 மணியளவில் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதனால், தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மயில் கிணற்றில் விழுந்தது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த அவர்கள், சுமார் 2 மணிநேரத்திற்குப் பிறகு மயிலை பத்திரமாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.