கோவை : விதிகளை மீறி கூடுதல் தளங்கள் கட்டியதால் ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடை வளாகத்துக்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
கோவை : விதிகளை மீறி கூடுதல் தளங்கள் கட்டியதால் ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடை வளாகத்துக்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் துணிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகள் என பல்வேறு கடைகள் உயரமான கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒப்பணக்கார வீதியில் பிரபல சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு சொந்தமான கடை செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம், பார்க்கிங் இடத்தை குடோனாக பயன்படுத்தியது, திறந்தவெளி பகுதியை விடாமல் இருந்தது ஆகிய காரணங்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், ஒப்பணக்கார வீதி சரவணா செல்வரத்தினம் வளாகத்துக்கு உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர். துணிக்கடையாக செயல்படும் இக்கட்டிடம், தரைத்தளம் மற்றும் 5 தளங்கள் கொண்டது. கட்டிடத்திற்கு சீல் வைக்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, முன்னேச்சரிக்கையாக போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.