கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவியர் சார்பில் வெள்ளமடை கிராமத்தில் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.
கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவ, மாணவியர் சார்பில் வெள்ளமடை கிராமத்தில் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர் கோவை மாவட்டம், அன்னூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நான்கு கிராமங்களான, வெள்ளமடை, காளிபாளையம், தொட்டிபாளையம், சாமநாயக்கன்பாளையம் ஆகியவற்றைத் தேர்வு செய்து நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில், இரண்டாம் வருடமாக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், வெள்ளமடை கிராமத்தில், நேற்று தொடங்கி ஜுன் 2-ம் தேதி வரை நடக்க உள்ளது.

தொடர்ந்து, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. பாக்கியவதி, நாட்டு நலப்பணித்திட்டத்தைப் பற்றியும், அதன் பயன்களையும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், நாட்டு நலப்பணித் திட்ட சேவைப் பணிகளின் மூலம் கிராமங்களில் ஏற்படும் வளர்ச்சியையும், தாக்கத்தையும் தேர்வு செய்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிய வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர் கோவை மாவட்டம், அன்னூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நான்கு கிராமங்களான, வெள்ளமடை, காளிபாளையம், தொட்டிபாளையம், சாமநாயக்கன்பாளையம் ஆகியவற்றைத் தேர்வு செய்து நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அந்த வகையில், இரண்டாம் வருடமாக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், வெள்ளமடை கிராமத்தில், நேற்று தொடங்கி ஜுன் 2-ம் தேதி வரை நடக்க உள்ளது.

தொடர்ந்து, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. பாக்கியவதி, நாட்டு நலப்பணித்திட்டத்தைப் பற்றியும், அதன் பயன்களையும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், நாட்டு நலப்பணித் திட்ட சேவைப் பணிகளின் மூலம் கிராமங்களில் ஏற்படும் வளர்ச்சியையும், தாக்கத்தையும் தேர்வு செய்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிய வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.