எத்தியோப்பியா நாட்டிலும் கிளையை விரிவுபடுத்தியது கே.பி.ஆர். மில்ஸ்.

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் பிரபல கே.பி.ஆர். மில், எத்தியோப்பியா நாட்டில் தனது கிளையை விரிவுபடுத்தியுள்ளது.

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் பிரபல கே.பி.ஆர். மில், எத்தியோப்பியா நாட்டில் தனது கிளையை விரிவுபடுத்தியுள்ளது. 

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆடை தயாரிப்பு நிறுவனமான கே.பி.ஆர். மில், எத்தியோப்பியா நாட்டில் உள்ள மக்கெல்லே தொழிற்சாலை பூங்காவில் தயாரிப்பு கிளையை தொடங்கியுள்ளது. இது, அந்நிறுவனத்தின் முதல் வெளிநாட்டு கிளையாகும். இதற்காக, மொத்தம் 15 மில்லியன் டாலரை முதலீடாக கே.பி.ஆர். மில்ஸ் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக, 5 மில்லியன் டாலர் மூலம் 'கே.பி.ஆர். ஏற்றுமதி பிரைவேட் லிமிடெட் கம்பெனி' எனத் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முன்னோட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கிளையின் மூலம் தற்போது வரை 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேலும், 53,300 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கிளையில் மொத்தம் உள்ள 20 ஆடை தையல் பிரிவுகளில், 12 பிரிவுகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. அதோடு, பின்னலாடை தயாரிப்புகளில் கட்டிங், ப்ரசிங், பேக்கிங் உள்ளிட்ட துறைகள் இயங்கி வருகின்றன. எத்தியோப்பியாவில் இருந்து 12 பேர் கோவை நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டு பயிற்சி அழைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அவர்கள் எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். 

இது குறித்து நிர்வாக இயக்குநர் சக்திவேல் கூறுகையில், "வெளிநாட்டில் முதல்முறையாக நிறுவப்பட்ட முதல் தயாரிப்பு நிறுவனமாகும். மக்கெல்லே யூனிட் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு எளிதில் ஏற்றுமதி செய்ய இயலும். கே.பி.ஆர். குழுமத்தின் மார்க்கெட் அலுவலகம் சிங்கப்பூரில் உள்ளது. அண்மையில் FASO என்ற உள்ளூர் தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பிற நாடுகளிலும் கிளைகளை விரிவுபடுத்துவது பற்றி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது," என்றார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...