கோவை : கோவையில் பி.எஸ்.என்.எல். ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 80 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் பி.எஸ்.என்.எல். ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 80 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் போஸ்டல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். பிஸ்.எல்.என்.எல் அலுவலகத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் இவர், நேற்று குடும்பத்துடன் உறவினரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். நள்ளிரவு வீடு திரும்பிய போது, வீட்டின் முதல் மாடி கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கம் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது தொடர்பாக பேரூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.

இதில், வீட்டில் இருந்த 80 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, கொள்ளை சம்பத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரசு ஊழியர்கள் அதிகளவு குடியிருக்கும் இந்த பகுதியில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.