கோவை : சிவானந்தபுரம் அருகே நிலத்தை விற்பனை செய்வதாகக் கூறி 32 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : சிவானந்தபுரம் அருகே நிலத்தை விற்பனை செய்வதாகக் கூறி 32 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுசித்தாபுதூரைச் சேர்ந்த மருத்துவர் ராஜேஸ்வரி என்பவர் சிவானந்தபுரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் கிளினிக் அமைப்பதற்காக சொந்தமாக நிலத்தை வாங்க திட்டமிட்டிருந்தார். இதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை அணுகி, 1 1/2 சென்ட் பரப்பளவில் பழைய கட்டிடத்துடன் இருக்கும் நிலத்தை வாங்க முடிவு செய்து, இதற்காக ரூ. 32,50,000 மற்றும் பழைய கட்டிடத்தை ரூ.70,000 போகியத்திற்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டார்.
ஆனால், நிலத்தை கிரையம் செய்யாமல் ராஜேந்திரன் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், அந்த இடத்தை தனது உறவுக்காரரான சாவித்ரி என்பவருக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்துள்ளார். பின்னர், இது தொடர்பாக மருத்துவர் ராஜேஸ்வரி, ராஜேந்திரனின் வீட்டிற்கு நேரில் சென்று கேட்டதற்கு, இடத்தையோ, பணத்தையோ திருப்பிக் கொடுக்க முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், ஏமாற்றம் அடைந்த மருத்துவர் ராஜேஸ்வரி, பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தை வழங்காமல் மோசடி செய்தது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ராஜேந்திரன் மற்றும் உறவுக்கார பெண்ணான சாவித்ரி ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
புதுசித்தாபுதூரைச் சேர்ந்த மருத்துவர் ராஜேஸ்வரி என்பவர் சிவானந்தபுரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் கிளினிக் அமைப்பதற்காக சொந்தமாக நிலத்தை வாங்க திட்டமிட்டிருந்தார். இதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை அணுகி, 1 1/2 சென்ட் பரப்பளவில் பழைய கட்டிடத்துடன் இருக்கும் நிலத்தை வாங்க முடிவு செய்து, இதற்காக ரூ. 32,50,000 மற்றும் பழைய கட்டிடத்தை ரூ.70,000 போகியத்திற்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டார்.
ஆனால், நிலத்தை கிரையம் செய்யாமல் ராஜேந்திரன் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், அந்த இடத்தை தனது உறவுக்காரரான சாவித்ரி என்பவருக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்துள்ளார். பின்னர், இது தொடர்பாக மருத்துவர் ராஜேஸ்வரி, ராஜேந்திரனின் வீட்டிற்கு நேரில் சென்று கேட்டதற்கு, இடத்தையோ, பணத்தையோ திருப்பிக் கொடுக்க முடியாது எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், ஏமாற்றம் அடைந்த மருத்துவர் ராஜேஸ்வரி, பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தை வழங்காமல் மோசடி செய்தது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ராஜேந்திரன் மற்றும் உறவுக்கார பெண்ணான சாவித்ரி ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.