நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பூங்கா மையப்பகுதியில் வேளாண் துறையினர் 'உழவன் செயலி' பேனரை வைத்து, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பூங்கா மையப்பகுதியில் வேளாண் துறையினர் 'உழவன் செயலி' பேனரை வைத்து, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில், மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், விவசாயிகள் வேளாண் நலத்திட்டங்களைப் பெறும் வகையில், 'உழவன் செயலி' என்ற செல்லிடப்பேசி செயலியை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை விவசாயிகள் மட்டுமின்றி, அனைவரும் பதிவிறக்கம் செய்துகொண்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு விவரம், உரங்கள், விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, உதவி வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் தங்களது பகுதிக்கு வருகை தரும் நாள், உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக, 'வேளாண்மை திட்டங்களைப் பெறுவதற்கு 'உழவன் செயலி' கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டு வருவதால், அதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் 'உழவன் செயலி' குறித்து பேனர் வைக்கப்பட்டு அதில், உள்ள திட்டங்களை அறிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மக்கள் அதிகமாகக் கூடுவதால் பூங்கா வளாகத்தில் மையப்பகுதியில் வேளாண் துறையினர் 'உழவன் செயலி' பேனர் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
சிறு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில், மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், விவசாயிகள் வேளாண் நலத்திட்டங்களைப் பெறும் வகையில், 'உழவன் செயலி' என்ற செல்லிடப்பேசி செயலியை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை விவசாயிகள் மட்டுமின்றி, அனைவரும் பதிவிறக்கம் செய்துகொண்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு விவரம், உரங்கள், விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரம் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை முன் அறிவிப்பு, உதவி வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள் தங்களது பகுதிக்கு வருகை தரும் நாள், உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக, 'வேளாண்மை திட்டங்களைப் பெறுவதற்கு 'உழவன் செயலி' கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டு வருவதால், அதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் 'உழவன் செயலி' குறித்து பேனர் வைக்கப்பட்டு அதில், உள்ள திட்டங்களை அறிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மக்கள் அதிகமாகக் கூடுவதால் பூங்கா வளாகத்தில் மையப்பகுதியில் வேளாண் துறையினர் 'உழவன் செயலி' பேனர் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.