கோவையில் கட்சி விட்டு கட்சி தாவியதால் ஆத்திரம் : தாயின் கண் முன்னே இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மர்ம கும்பல்

கோவை : வீரகேரளம் அருகே தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த கும்பல், தாயின் கண் முன்னே கொலை செய்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை : வீரகேரளம் அருகே தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை வழிமறித்த கும்பல், தாயின் கண் முன்னே கொலை செய்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

தடாகம் சாலையில் உள்ள குமாரசாமி காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26). இவர் ஜோதிடராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அவரது தாயாருடன் வீரகேரளம் அருகே மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் வாகனத்தில் இருந்து கீழே தள்ளி கத்தியால் சரமாரியாகக் குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதில், மகனை காப்பாற்றுமாறு சந்தோஷின் தாயார் பிரேமலதா கதறி அழுதுள்ளார். ஆனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த சந்தோஷ், தாயின் கண்முன்னே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.



இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குடியரசுக் கட்சியில் அவருடைய சித்தப்பாவுடன் இணைந்து பணியாற்றி வந்த சந்தோஷ், தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். பின்னர், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட நபர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துள்ளார். இந்த ஆத்திரத்தில் அக்கட்சியைச் சேர்ந்த கும்பல் இவரை கொலை செய்ததாகத் தெரிய வருகிறது. இதனிடையே, இந்த கொலை காரணம் குறித்து ஆதாரங்களை திரட்டி வரும் காவல்துறையினர், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...