மிருகபலத்துடன் மத்திய அரசு இருந்தாலும், தமிழக நலன் காக்க 38 எம்.பி.க்களும் செயல்படுவோம் : கோவையில் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பேட்டி

கோவை : மிருகபலத்துடன் மத்திய அரசு இருந்தாலும், அதை முறியடித்து தமிழகத்தின் நலன் காக்க தேர்வான 38 எம்.பிகளும் செயல்படுவோம் என ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை : மிருகபலத்துடன் மத்திய அரசு இருந்தாலும், அதை முறியடித்து தமிழகத்தின் நலன் காக்க தேர்வான 38 எம்.பிகளும் செயல்படுவோம் என ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரோடு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கணேசமூர்த்தி இன்று கோவை காந்திபுரம் ம.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவருக்கு கோவை ம.தி.மு.க.வினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர், ம.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த எம்.பி. கணேசமூர்த்தி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- நடைபெற்று முடிந்த தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க வெற்றி இருந்தாலும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அனைத்து பகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், தேர்வான மக்களவை உறுப்பினர்கள் செயல்படுவோம். முல்லை பெரியாறு, அமராவதி, கீழ்பவானி என அனைத்து விவகாரங்களிலும் கொங்கு மண்டல எம்.பி.க்கள் இணைந்து செயல்படுவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், வாழ்வாதாரங்களை மீட்கவும், நதிநீர் பிரச்சினைகளுக்காவும் தமிழக எம்.பி.க்கள் போராடுவோம். மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி இல்லை என்ற குறை இல்லாமல் போராடி உரிமைகளை பெற்றுக் கொடுப்போம். 

கடந்த முறை இருந்த 37 உறுப்பினர்களுக்கு இணையாக தற்போது தேர்வான மக்களவை உறுப்பினர்கள் செயல்படுவோம். மாநிலத்தின் நலன் காப்பதற்காக இணைந்து செயல்பாடுவோம். தமிழகத்தில் தோற்றவர்கள் ஏதாவது பேசுவார்கள். அதைபற்றி கவலையில்லை. மிருகபலத்துடன் மத்திய அரசு இருந்தாலும், அதை முறியடித்து தமிழகத்தின் நலன் காக்க தேர்வான 38 எம்.பி.க்களும் செயல்படுவோம், என தெரிவித்தார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...