வரும் 27-ம் தேதி முதல் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான போக்குவரத்து தற்காலிக மாற்றம்

கோவை : மேம்பாலக் கட்டுமான பணி காரணமாக உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான போக்குவரத்து வரும் 27-ம் தேதி முதல் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கோவை : மேம்பாலக் கட்டுமான பணி காரணமாக உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான போக்குவரத்து வரும் 27-ம் தேதி முதல் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நிறுத்தப்பட்ட தூண்களின் மீது கர்டர் அமைக்கும் பணி வரும் 27-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், பணிகளை விரைந்து முடிப்பதற்காகவும் உக்கடம் - ஆத்துப்பாம் இடையிலான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பேருர் புறவழிச்சாலை, சேத்துமாவாய்க்கால் சந்திப்பு, புட்டுவிக்கி சாலை, சுண்ணாம்பு வாய்க்கால் வழியாக பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளுக்கு சென்றடையலாம். எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...